sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வால்பாறையில் கனமழை தீவிரம் மீண்டும் நிரம்பியது சோலையாறு

/

வால்பாறையில் கனமழை தீவிரம் மீண்டும் நிரம்பியது சோலையாறு

வால்பாறையில் கனமழை தீவிரம் மீண்டும் நிரம்பியது சோலையாறு

வால்பாறையில் கனமழை தீவிரம் மீண்டும் நிரம்பியது சோலையாறு


ADDED : அக் 16, 2024 06:12 AM

Google News

ADDED : அக் 16, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : கோவை மாவட்டம், வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி தொடர்ந்து பெய்கிறது. பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள சோலையாறு, காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பின.

இந்நிலையில், 10 நாட்களுக்கு மேலாக வால்பாறையில் கனமழை பெய்யும் நிலையில், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதி களான, மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி, பிர்லா நீர்வீழ்ச்சிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சோலையாறு அணையின், 160 அடி உயரத்துக்கு நேற்று அதிகாலை நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 609 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது.

இதனால், அணையி லிருந்து வினாடிக்கு, 385 கனஅடி தண்ணீர் வீதம் சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.

நடப்பாண்டில், ஏழாவது முறையாக சோலையாறு அணை நிரம்பியதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us