sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாசக்டமி கருத்தடை முகாம் குடும்ப நலத்துறை ஏற்பாடு

/

வாசக்டமி கருத்தடை முகாம் குடும்ப நலத்துறை ஏற்பாடு

வாசக்டமி கருத்தடை முகாம் குடும்ப நலத்துறை ஏற்பாடு

வாசக்டமி கருத்தடை முகாம் குடும்ப நலத்துறை ஏற்பாடு


ADDED : மார் 17, 2024 11:57 PM

Google News

ADDED : மார் 17, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன 'வாசக்டமி' கருத்தடை முகாம் நடக்கிறது.

கோவை மாவட்ட குடும்பநலத்துறை துணை இயக்குநர் கவுரி கூறியதாவது: பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், வரும், 20ம் தேதி, ஆண்களுக்கான நவீன 'வாசக்டமி' கருத்தடை முகாம் நடக்கிறது.

இந்த சிகிச்சை சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களைக்கொண்டு, 10 நிமிடங்களில் இலவசமாக மேற்கொள்ளப்படும்.

கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் ஒவ்வொரு ஆண்களுக்கும், அரசு ஊக்கத்தொகையாக 1,100 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக பொள்ளாச்சி ரோட்டரி கிளப் மற்றும் கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் சார்பில் தலா, 1,000 ரூபாய் வீதம் மொத்தம் 3,100 ரூபாய் வழங்கப்படும்.

கருத்தடை சிகிச்சை மேற்கொள்வதால் எவ்வித பாதிப்பும், பக்க விளைவுகளும் ஏற்படாது. அதேபோல, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமும் கிடையாது.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் விபரம் அறிய, 97897 80933, 94435 22517, 80728 65541 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us