ADDED : மார் 09, 2024 10:42 PM

தேவையான பொருட்கள்:
சுண்டவத்தல் - 50 கிராம்
மணத்தக்காளி வத்தல் - 25 கிராம்
உளுத்தம் பருப்பு--50 கிராம்
மோர் மிளகாய் - மூன்று முதல் நான்கு
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு பிடி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
செய்முறை:
வாணலியை சூடுபடுத்தி, இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக வறுத்தெடுத்து எடுத்துக்கொள்ளவும். அதே எண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இறுதியாக, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் போட்டு வறுத்தெடுக்கவும்.
ஆறியதும்,மிக்சியில் அனைத்தையும் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தோடு நெய்சேர்த்து கலந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால், உப்பை கவனமாக பார்த்து சேர்க்க வேண்டும். சுண்ட வத்தல் மற்றும் மணத்தக்காளி வத்தல் சேர்த்து செய்யும் இந்த சாதப்பொடி, மிகவும் ஆரோக்கியமானது.
