/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கறிகள் வரத்து குறைவு; விலை உயருமென எதிர்பார்ப்பு
/
காய்கறிகள் வரத்து குறைவு; விலை உயருமென எதிர்பார்ப்பு
காய்கறிகள் வரத்து குறைவு; விலை உயருமென எதிர்பார்ப்பு
காய்கறிகள் வரத்து குறைவு; விலை உயருமென எதிர்பார்ப்பு
ADDED : அக் 23, 2024 12:08 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்தும், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்கின்றனர். கேரள மாநிலம் அருகே உள்ளதால், உடனுக்குடன் காய்கள் விற்பனையாகிறது. தற்போது மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து, 10 சதவீதம் குறைந்தும் உள்ளது.
மார்க்கெட்டில் நேற்று, தக்காளி (15 கிலோ பெட்டி) - 700, தேங்காய் ஒன்று - 20, கத்தரிக்காய் கிலோ - - 45, வெண்டைக்காய் - 50, முள்ளங்கி - 28, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 18, பாகற்காய் - 40, புடலை - 33, சுரைக்காய் - 27, பீர்க்கங்காய் - 40, பீட்ரூட் - 20, அவரைக்காய் - 50, பச்சை மிளகாய் - 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த வாரத்தை விட தற்போது, தக்காளி பெட்டி - 150 ரூபாய், தேங்காய் ஒன்று - 5, கத்தரிக்காய் - 15, அவரைக்காய் - 20 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.
வெண்டைக்காய் - 5, பூசணிக்காய் - 3, அரசாணிக்காய் - 8, பாகற்காய் - 15, புடலை - 13, சுரைக்காய் - 4, பீர்க்கங்காய் - 15, ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. மற்றும் முருங்கைக்காய், வெள்ளரி வரத்து இல்லை.
வியாபாரிகள் கூறுகையில், 'வழக்கத்தை விட காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு சில காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மழை இருப்பின் காய்கறிகள் விலை உயர வாய்ப்புள்ளது' என்றனர்.