/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முதல்வர் கோப்பை' கூடைப்பந்து போட்:டி திருவள்ளூர் அணியை வீழ்த்திய வேலுார்
/
'முதல்வர் கோப்பை' கூடைப்பந்து போட்:டி திருவள்ளூர் அணியை வீழ்த்திய வேலுார்
'முதல்வர் கோப்பை' கூடைப்பந்து போட்:டி திருவள்ளூர் அணியை வீழ்த்திய வேலுார்
'முதல்வர் கோப்பை' கூடைப்பந்து போட்:டி திருவள்ளூர் அணியை வீழ்த்திய வேலுார்
ADDED : அக் 14, 2024 09:34 PM

கோவை: கல்லுாரி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் நேற்று துவங்கிய நிலையில், முதல் போட்டியில் வேலுார் அணி, 72-55 என்ற புள்ளி கணக்கில், திருவள்ளூர் அணியை வீழ்த்தியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநிலம் முழுவதும் 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் கடந்த செப்., 10ம் தேதி முதல், 24ம் தேதி வரை நடந்தது. தடகளம், கால்பந்து, கபடி, சிலம்பம் என பல்வேறு போட்டிகள், மாவட்ட அளவில் நடத்தப்பட்டன.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடக்கிறது. கோவையில் நேரு விளையாட்டு எதிரே மாநகராட்சி மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த, 7ம் தேதி துவங்கியது.
பள்ளி மாணவர்களை தொடர்ந்து, நேற்று கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் துவங்கின. முதல் போட்டியில், வேலுார் அணியும், திருவள்ளூர் அணியும் மோதின. இதில், 72-55 என்ற புள்ளி கணக்கில் வேலுார் அணி வெற்றி பெற்றது.
இரண்டாம் ஆட்டத்தில், நாகப்பட்டினம் அணி, 81-52 என்ற புள்ளி கணக்கில் திருப்பூர் அணியை வென்றது. வீராங்கனைகளுக்கான முதல் போட்டியில், திருவள்ளூர் அணி, 80-54 என்ற புள்ளி கணக்கில் புதுக்கோட்டை அணியை வென்றது.
இரண்டாவது போட்டியில், துாத்துக்குடி அணி, 63-6 என்ற புள்ளி கணக்கில் நாகப்பட்டினம் அணியை வென்றது. வரும், 18ம் தேதி வரை வீரர், வீராங்கனைகள் என, இரு பிரிவுகளிலும் தலா, 38 மாவட்ட அணிகள் விளையாடுகின்றன.