/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமைப்போர்வை உருவாக்கும் கிராம நாற்றுப்பண்ணை
/
பசுமைப்போர்வை உருவாக்கும் கிராம நாற்றுப்பண்ணை
ADDED : ஏப் 25, 2025 11:24 PM
நுாறு நாள் வேலை திட்டம் வாயிலாக, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் முயற்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு காரணமாக, நடுவச்சேரி கிராமத்தில், அரியவகை மரக்கன்றுகளுடனான நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், பசுமையை மேம்படுத்தவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் முக்கியப் பங்காற்றி வருகிறது.
அழிந்து வரும் அரிய வகை மரங்களான கொடாம்புளி, சிலுப்பலான், பூந்திக்கொட்டை, செஞ்சந்தனம், மகோகனி, குமிழ், வேம்பு, இலுப்பை, குதிரை குளம்பு மற்றும் பல மூலிகை செடிகள் உட்பட பல்வேறு வகை மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.
இங்கு, 70 முதல் 90 சதவீதம் வரை முளைப்பு திறன் கொண்ட விதைகள் மட்டுமே நாற்று உற்பத்திக்கு தேர்வு செய்யப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள, தமிழக வனத் துறைக்கு சொந்தமான விதை சேகரிப்பு மையம், திருச்சி அரசு வன விதைகள் சேகரிப்பு மையம் மற்றும் கேரளா அரசு வன விதைகள் சேகரிப்பு மையம் ஆகியவைகளில் இருந்து, தரமான விதைகள் வாங்கி வந்து இங்கு நாற்றுகளாக உருவாக்கப்படுகிறது.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தரமான நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது, அதிக விளைச்சலை உறுதி செய்கிறது.
விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் மற்றும் நாற்றுகள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. மரம் வளர்ப்பை ஊக்குவிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன
- நமது நிருபர் -.

