/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 24, 2025 06:12 AM

அன்னுார்: கெம்பநாயக்கன்பாளையம், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கெம்பநாயக்கன்பாளையத்தில், பழமையான உள்ளூர் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் முடிந்தது. இதையடுத்து, பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.
கும்பாபிஷேக விழா, கடந்த 21ம் தேதி புனித நீர் வழிபாடுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காலை விநாயகர் வேள்வி நடந்தது. இரவு விமான கலசங்கள் நிறுவப்பட்டு, எண் வகை மருந்து சாத்தப்பட்டது.
நேற்று அதிகாலையில் வேள்வி பூஜை நடந்தது. காலை 9:45 மணிக்கு கோபுரம் மற்றும் உள்ளூர் விநாயகருக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து செல்வ விநாயகருக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை நடந்தது.
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், சின்னத் தொட்டிபாளையம் அருணை அருள்முக அடிகளார் அருளுரை வழங்கினர்.
அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

