sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குவாரியில் விதிமீறல்; கனிம வளத்துறையினர் ஆய்வு

/

குவாரியில் விதிமீறல்; கனிம வளத்துறையினர் ஆய்வு

குவாரியில் விதிமீறல்; கனிம வளத்துறையினர் ஆய்வு

குவாரியில் விதிமீறல்; கனிம வளத்துறையினர் ஆய்வு


ADDED : ஜூலை 18, 2025 09:23 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 09:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரில் உள்ள கல்குவாரியில் கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரில், அரசுக்கு சொந்தமான பாறையை குணசேகரன், ரத்தினசாமி, பஞ்சலிங்கம், சிவப்பிரகாஷ் ஆகிய நான்கு நபர்கள் குத்தகைக்கு எடுத்து, கல்குவாரி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பது குறித்து, மூன்று ஆண்டுகளாக விவசாயிகள் பல முகாம்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்ட போது, கற்கள் சிதறி அருகிலுள்ள வீட்டின் மீது விழுந்தது. அச்சமடைந்த வீட்டின் உரிமையாளர் முருகானந்தம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குவாரி மீது நடவடிக்கை எடுத்து, மூட வேண்டும் என, மனு அளித்தார்.

இதையடுத்து, நேற்று மாலை, கனிமவளத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ்பாபு மற்றும் வருவாய் துறையினர், குவாரி மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டை ஆய்வு செய்தனர்.

இதில், வீட்டை ஆய்வு செய்த பின், கனிமவளத் துறை அதிகாரி, பாதிக்கப்பட்ட நபரிடம் இனிமேல் இது போன்று நடக்காத படி குவாரி நிர்வாகத்திடம் எச்சரிக்கை விடுக்கப்படும், பாதுகாப்பான முறையில் குவாரியை இயக்க அறிவுறுத்தப்படும், என, மனுதாரரிடம் தெரிவித்தனர்.

கனிவளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'குவாரியை ஆய்வு செய்ததில், அதிகளவு பணியாட்களை கொண்டு கற்கள் வெட்டி எடுக்கின்றனர். குறைந்த அளவு மட்டுமே வெடி வைக்கப்படுகிறது. பாதுகாப்பான முறையில் குவாரியை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

போராட்டம் நடத்துவோம்!

மனுதாரர் முருகானந்தம் கூறியதாவது:குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடக்கிறது. இது சம்பந்தமாக பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. குவாரியை மூட வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தால், அவர்களோ குவாரியை இயக்குவதிலேயே குறிக்கோளாக இருக்கின்றனர். இதனால் எங்கள் விளை நிலம் பாதிக்கப்படுகிறது.நேற்று நடந்த ஆய்வில் திருப்தி இல்லை.எங்களை சமாதானம் செய்கிறார்களே தவிர குவாரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.மேலும், குவாரி விதிமீறல் குறித்து ஆதாரப்பூர்வமாக ஆவணங்களை கொடுத்தாலும் கனிமவளத்துறை கண்டுகொள்ளவில்லை. விரைவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு, கூறினார்.








      Dinamalar
      Follow us