sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பால் தரம் அறிய 'இ---மேட்' கருவி தன்னார்வலர்கள் வேண்டுகோள்

/

பால் தரம் அறிய 'இ---மேட்' கருவி தன்னார்வலர்கள் வேண்டுகோள்

பால் தரம் அறிய 'இ---மேட்' கருவி தன்னார்வலர்கள் வேண்டுகோள்

பால் தரம் அறிய 'இ---மேட்' கருவி தன்னார்வலர்கள் வேண்டுகோள்


ADDED : நவ 29, 2024 11:04 PM

Google News

ADDED : நவ 29, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: அதிகளவில் பால் உற்பத்தி, கொள்முதல் செய்யப்படும் இடங்களில், பொதுமக்களே பாலின் தரத்தை அறிந்து கொள்ள, 'இ---மேட்' கருவி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கறவை மாடு வளர்ப்போர், 'ஆவின்' மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, பால் வழங்குகின்றனர். இதுதவிர, நேரடியாகவும், பால் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், பொதுமக்களால், பாலின் தரம் மற்றும் எடை உறுதிபடுத்தப்படுவதில்லை. பாலில், எடையளவு குறைவதால், நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். கலப்பட பாலை உட்கொள்வதால், நோய் ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்களே, பாலின் தரத்தை கண்டறியும் வகையில், 'இ---மேட்' எனப்படும், 'எல்ட்க்ரானிக் மில்க் அடல்ட்ரேஷன் டெஸ்ட்' கருவியை, ஆங்காங்கே வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தன்னார்வலர்கள் கூறியதாவது:

சமீபகாலமாக, பால் விற்பனையில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில், ஆங்காங்கே காலை மற்றும் மாலை நேரங்களில், ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து, பால் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், விலைக்கு ஏற்ப பாலின் தரம் இருப்பதில்லை. அதனை அறிய முடியாமல் நுகர்வோர் பலரும் திணறி வருகின்றனர். எனவே, அதிகளவில் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்யப்படும் இடங்களைத் தேர்வு செய்து, அங்கு, 'இ---மேட்' கருவி வைக்க உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் வாயிலாக, நுகர்வோர், இலவசமாக, பாலின் தரத்தை பரிசோதிக்க முடியும். பாலில், கலப்படம் இருப்பது தெரியவந்தால், புகாரும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us