sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலக சாதனை பதிவுக்காக வியாக்த பச்சிமோத்தாசனம்

/

உலக சாதனை பதிவுக்காக வியாக்த பச்சிமோத்தாசனம்

உலக சாதனை பதிவுக்காக வியாக்த பச்சிமோத்தாசனம்

உலக சாதனை பதிவுக்காக வியாக்த பச்சிமோத்தாசனம்


ADDED : ஜன 07, 2025 11:00 PM

Google News

ADDED : ஜன 07, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை,; ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தில், மாணவர்கள் ஒன்றிணைந்து, தொடர்ந்து, 10 நிமிடம் 'வியாக்த பச்சிமோத்தாசனம்' என்ற ஆசனத்தை செய்து அசத்தினர்.

ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தில், 'குளோபல் வேல்டு ரெக்கார்டு' அமைப்பு வாயிலாக உலக சாதனைக்கான யோகாசனம் நடத்தப்பட்டது. இதில், கஸ்துாரிபாய் காந்தி இல்ல விடுதியில் தங்கி பயின்று வரும், ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.டி., அரசு மேல்நிலைப்பள்ளி, குப்பிச்சிப்புதுார் அரசு ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

அதில் 'வியாக்த பச்சிமோத்தாசனம்' என்ற ஆசனத்தை, 10 நிமிடங்கள் தொடர்ந்து செய்து அசத்தினர்.தொடர்ந்து, உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

'குளோபல் வேல்டு ரெக்கார்டு' அமைப்பு மேலாளர் ராஜேஷ், ஆசிரம நிர்வாக அறங்காவலர் ரங்கநாதன் ஆகியோர் மாணவர்களுக்கு யோகாசன சாதனைக்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

யோகா பயிற்சியால், உடலும், மனமும் ஒருநிலைப்படும். மாணவர்கள் தினமும் யோகா பயிற்சி மேற்கொள்வதால், மனம் புத்துணர்ச்சி அடையும். கல்வியிலும் அதிக நாட்டம் செலுத்த முடியும் என, தெரிவிக்கப்பட்டது.

யோகா ஆசிரியர் கிருஷ்ணராஜ், தனியார் நிறுவன உரிமையாளர் கார்த்திக் சின்ராஜ், ஆசிரம விடுதிக் காப்பாளர் சர்வோதயா, ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us