ADDED : பிப் 05, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம உதவியாளர்கள் சங்கத்தினர், சூலுார் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூலுார் வருவாய் கிராம ஊழியர் தலைவர் கருணாகரன் தலைமையில் போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், வரும்,27ம்தேதி மாநில அளவில் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட உள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.