sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வளைவுகளில் வரையாடுகள்; ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

/

வளைவுகளில் வரையாடுகள்; ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

வளைவுகளில் வரையாடுகள்; ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

வளைவுகளில் வரையாடுகள்; ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை


ADDED : ஜன 11, 2025 09:47 AM

Google News

ADDED : ஜன 11, 2025 09:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறை மலைப்பாதையில் உள்ள, கொண்டைஊசி வளைவுகளிடையே வரையாடுகள் நடமாடுவதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இது தவிர, வரையாடு, சிங்கவால் குரங்குகள் வால்பாறை மலைப்பகுதியில் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பகுதியில், வளைந்து நெளிந்து செல்லும் ரோட்டிலும், மலைச்சரிவுகளிலும் வரையாடுகள் அதிக அளவில் நடமாடுகின்றன.

வரையாடுகள் ஆபத்தை உணராமல், நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் உலா வருவதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை மலைப்பாதையில், வரையாடுகள் நடமாடுவதால் சுற்றுலா பயணியர் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தவோ, வரையாடுகளை போட்டோ எடுப்பதோ, 'செல்பி' எடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us