sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மழைப்பொழிவு குறைந்ததால் அணைகளின் நீர்மட்டம் சரிவு

/

 மழைப்பொழிவு குறைந்ததால் அணைகளின் நீர்மட்டம் சரிவு

 மழைப்பொழிவு குறைந்ததால் அணைகளின் நீர்மட்டம் சரிவு

 மழைப்பொழிவு குறைந்ததால் அணைகளின் நீர்மட்டம் சரிவு


ADDED : டிச 26, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: மழைப்பொழிவு குறைந்ததால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

வால்பாறையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த, 10 நாட்களாக மழைப்பொழிவு குறைந்து, கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடுங்குளிர் நிலவுகிறது.

இதனிடையே, பனிப்பொழிவு அதிகரித்து வருவதால், எஸ்டேட் பகுதியில் தேயிலை செடிகள் கருகும் அபாயம் உள்ளது.

மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 124.87 அடியாக இருந்தது. இதே போல், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம், 115.60 அடியாகவும், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 69.01 அடியாகவும் இருந்து.






      Dinamalar
      Follow us