/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாய் உடைப்பு: சீரமைப்பு பணி தீவிரம்
/
குடிநீர் குழாய் உடைப்பு: சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : ஏப் 03, 2025 08:39 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், அம்பராம்பாளையத்தில் உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து, ஒரு நாளுக்கு, 14 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது.
மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர்உந்து நிலையம் வாயிலாக, ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், நகராட்சி அலுவலகம் அருகே, வெங்கடேசா காலனி வாட்டர் டேங்க்கில் இருந்து வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதே போன்று, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு தனியார் காம்ப்ளக்ஸ் அருகேயும், குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமானது. இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வெங்கடேசா காலனி வாட்டர் டேங்க்கில் இருந்து, குமரன் நகர், வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் விரயமாவதை தடுக்கும் வகையில் உடனடியாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது,' என்றனர்.