ADDED : ஏப் 14, 2025 04:51 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் இளநீர் சாகுபடி பிரதானமாக உள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 46 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 18,500 ரூபாய். தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அதன் காரணமாக இளநீரின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.
அதேநேரம், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், அதிக வெப்பநிலை போன்ற காரணங்களால் மகசூல் மிகவும் குறைந்துள்ளது.
வரும் காலங்களில் வெப்பநிலை அளவு கூடும். இளநீர் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.