/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு... துண்டிப்பு! ரூ.973 கோடி வராததால் மாநகராட்சி எச்சரிக்கை
/
வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு... துண்டிப்பு! ரூ.973 கோடி வராததால் மாநகராட்சி எச்சரிக்கை
வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு... துண்டிப்பு! ரூ.973 கோடி வராததால் மாநகராட்சி எச்சரிக்கை
வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு... துண்டிப்பு! ரூ.973 கோடி வராததால் மாநகராட்சி எச்சரிக்கை
ADDED : பிப் 13, 2026 05:10 AM

கோவை : ஏழாயிரம் ரூபாய்க்கு மேல் வரி பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் சொத்து வரி, குடிநீர் வரி, காலியிட வரி உள்ளிட்ட ஏழு வகை வரிகள் வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவோர் 5.88 லட்சம் பேர் உள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் வர வேண்டிய ரூ.1,541 கோடி வரியில்,நேற்று வரை ரூ.568 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது; ரூ.973 கோடி வரவேண்டியுள்ளது.
சொத்து வரி ரூ.664 கோடி வரவேண்டும். நேற்று வரை 393 கோடி வசூலாகி உள்ளது. ரூ.377 கோடி காலியிட வரியில்,ரூ.30 கோடிக்கும் கீழ் தான் வந்துள்ளது.
குடிநீர் வரி ரூ.99 கோடி வரவேண்டும்; ரூ.53 கோடி செலுத்தி உள்ளனர். இன்னும் ரூ.46 கோடி வர வேண்டும். இந்த நிலுவை தொகையை மார்ச் முடிவதற்குள் வசூலிக்கும் பணியில் பில் கலெக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய் பிரிவு அதிகாரிகள் முழு வீச்சில் வரி வசூலில் குதித்துள்ளனர். 'தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் வரியை முழுமையாக வசூலிக்க பில் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலர் ஐந்தாண்டுகள் வரை வரி செலுத்தாமல் உள்ளனர். வரி வசூலை வைத்துதான் வளர்ச்சி பணிகள் செய்ய முடியும். ரூ.7,000க்கு மேல்வரி நிலுவை வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்' என்றனர்.

