/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவில்களில் வளர்பிறை ஏகாதசி விழா
/
பெருமாள் கோவில்களில் வளர்பிறை ஏகாதசி விழா
ADDED : நவ 13, 2024 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சியிலுள்ள, பெருமாள் கோவில்களில் வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசி விழா நடந்தது.காலை, 10:30 மணிக்கு அபிேஷக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 11:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.
பெருமாள், தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரசாதம் வழங்கப்பட்டது.
இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.