sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நீரோடை ஓரத்தில் தடுப்பு அமைக்கணும்!

/

நீரோடை ஓரத்தில் தடுப்பு அமைக்கணும்!

நீரோடை ஓரத்தில் தடுப்பு அமைக்கணும்!

நீரோடை ஓரத்தில் தடுப்பு அமைக்கணும்!


ADDED : ஜன 20, 2025 10:53 PM

Google News

ADDED : ஜன 20, 2025 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வடசித்தூரில் உள்ள நீரோடை ஓரத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள, வடசித்தூர் பகுதியில் இருக்கும் நீரோடையில் தற்போது நீர்வரத்து உள்ளது. இதன் அருகில் உள்ள ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.

ரோட்டில் பயணிக்கும் மக்கள், நீரோடையை ரசித்தபடி செல்கின்றனர். சிலர் ஆபத்தை உணராமல் நீரோடையில் இறங்குகின்றனர்.

இந்த ரோடு குறுகலாக இருப்பதால், பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மற்றும் அவசர நிலைக்கு முந்திச் செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. முந்தி செல்ல முயற்சி செய்யும்போது நீரோடையில் வாகனம் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் மெதுவாக பயணிக்கும் சூழ்நிலை உள்ளது.

எனவே, அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் நலன் கருதி ரோட்டோரத்தில் தடுப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் நீரோடையின் மற்றொரு பகுதியில் வளர்ந்திருக்கும் புதரை அகற்றம் செய்து, தூய்மைப்படுத்த வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us