/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனித - வனவிலங்கு மோதல் தவிர்க்க குடியிருப்புகளை ஒருங்கிணைக்கணும்!
/
மனித - வனவிலங்கு மோதல் தவிர்க்க குடியிருப்புகளை ஒருங்கிணைக்கணும்!
மனித - வனவிலங்கு மோதல் தவிர்க்க குடியிருப்புகளை ஒருங்கிணைக்கணும்!
மனித - வனவிலங்கு மோதல் தவிர்க்க குடியிருப்புகளை ஒருங்கிணைக்கணும்!
ADDED : டிச 08, 2025 05:37 AM
வால்பாறை: எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், தொழிலாளர்களின் குடியிருப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
வால்பாறையில், 40க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், வால்பாறை மலைப்பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன.
வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், மனித- வன விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டத்தால், பகல் மற்றும் இரவு நேரங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
வனவிலங்களின் தாக்குதலுக்கு பயந்து தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
வால்பாறை மலைப்பகுதியில் யானை வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களை அப்புறப்படுத்த வேண்டும். தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் நுழைவதை தவிர்க்க, தனித்தனியாக உள்ள தொழிலாளர்களின் குடியிருப்புகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்தால், வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கலாம்.
வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வனத்துறையினர் எஸ்டேட் நிர்வாகத்துடன் பேசி, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதன் வாயிலாக மனித - வனவிலங்கு மோதலுக்கு தீர்வு காண முடியும்.
இவ்வாறு, கூறினர்.

