/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
/
புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : மே 14, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; கணேசபுரம், புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருவிழாவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கணேசபுரம், புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில், 30வது ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, அலங்கார பூஜை நடந்தது. மதியம் அக்னி கரகம் எடுத்து வரப்பட்டது. மாலையில் பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு வருதலும், மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று காலை மஞ்சள் நீராட்டுடன் மறுபூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.