/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு தொடக்கப்பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
அரசு தொடக்கப்பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஆக 05, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி ரோட்டரி சங்கம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, சேத்துமடை அண்ணா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் சதீஷ்சந்திரன் தலைமையும், செயலாளர் ஸ்ரீகாந்த் முன்னிலையும் வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக சங்க துணை கவர்னர் வெங்கடேஷ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாரதி, வட்டார கல்வி அலுவலர் செல்வமணி ஆகி யோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பாட்டிற்காக, 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய டெஸ்க் மற்றும் நாற்காலிகள் வழங்கப்பட்டன.