/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் வாழ்த்து அட்டைகளை தபால் வாயிலாக அனுப்புவோம்!
/
மீண்டும் வாழ்த்து அட்டைகளை தபால் வாயிலாக அனுப்புவோம்!
மீண்டும் வாழ்த்து அட்டைகளை தபால் வாயிலாக அனுப்புவோம்!
மீண்டும் வாழ்த்து அட்டைகளை தபால் வாயிலாக அனுப்புவோம்!
ADDED : ஜன 10, 2024 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நடைமுறையை, மீண்டும் கொண்டு வரும் பொருட்டு கோவை அஞ்சல் தொழிற்சங்கம் சார்பில், 'வாழ்த்து அனுப்பலாம் வாங்க' எனும் சிறப்பு வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
ஆர்.எஸ்.புரம் தலைமை போஸ்ட் ஆபீஸில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோட்டத்தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், தபால் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் வாழ்த்து அட்டைகளை எழுதி, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பினர். நிகழ்ச்சியை, கோட்ட செயலாளர் சிவசண்முகம் ஏற்பாடு செய்தார்.