/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நமக்குள்ள என்னங்க இருக்கு... வாங்க பேசி தீர்த்துக்கலாம்! நிலுவை வழக்கு விரைந்து முடிக்க.. 3 மாதம் சிறப்பு சமரச தீர்வு முகாம்
/
நமக்குள்ள என்னங்க இருக்கு... வாங்க பேசி தீர்த்துக்கலாம்! நிலுவை வழக்கு விரைந்து முடிக்க.. 3 மாதம் சிறப்பு சமரச தீர்வு முகாம்
நமக்குள்ள என்னங்க இருக்கு... வாங்க பேசி தீர்த்துக்கலாம்! நிலுவை வழக்கு விரைந்து முடிக்க.. 3 மாதம் சிறப்பு சமரச தீர்வு முகாம்
நமக்குள்ள என்னங்க இருக்கு... வாங்க பேசி தீர்த்துக்கலாம்! நிலுவை வழக்கு விரைந்து முடிக்க.. 3 மாதம் சிறப்பு சமரச தீர்வு முகாம்
ADDED : ஜூலை 10, 2025 10:05 AM

கோவை; நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க, சிறப்பு சமரச தீர்வு முகாம், கோவை மாவட்டத்தில் மூன்று மாதம் நடக்கிறது.
நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சிறப்பு சமரச தீர்வு முகாம், ஜூலை 1 முதல் செப்., 30 வரை நடக்கிறது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக சமரச தீர்வு மையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலுார், வால்பாறை ஆகிய தாலுகா நீதிமன்ற வளாகத்திலும், சமரச தீர்வு முகாம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை, நேரடியாகவோ, வக்கீல் வாயிலாகவோ சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம்.
இரு தரப்பினர் இடையே, சுமூகமாக சமரச தீர்வு காண, அனைத்து மையங்களிலும், பயிற்சி பெற்ற சமரசர்கள் வழிநடத்துவார்கள். சமரசர் முன்னிலையில், வழக்கு தொடர்ந்தவர், எதிர்தரப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம்.
தங்கள் தரப்பு வக்கீலுடன் பங்கேற்கலாம். சமரசம் ஏற்படவில்லை என்றால், நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணையை தொடரலாம். சமரச மையத்தில் சுமூக தீர்வு காணப்படும் பட்சத்தில், ஏற்கனவே செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெறலாம்.
சிறப்பு முகாம் தொடர்பாக, கோவை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்ற வளாகம் முழுவதும், நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 'வாங்க பேசி தீர்வு காண்போம்; சமரசம் வாயிலாக அமைதி கொள்ளுங்கள்' என்ற வாசகத்துடன், துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.