sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊரெல்லாம் குப்பை துாவும் மாநகராட்சி வாகனங்கள் ஒரு தார்ப்பாய் போட்டு மூடினால்தான் என்னவாம்!

/

ஊரெல்லாம் குப்பை துாவும் மாநகராட்சி வாகனங்கள் ஒரு தார்ப்பாய் போட்டு மூடினால்தான் என்னவாம்!

ஊரெல்லாம் குப்பை துாவும் மாநகராட்சி வாகனங்கள் ஒரு தார்ப்பாய் போட்டு மூடினால்தான் என்னவாம்!

ஊரெல்லாம் குப்பை துாவும் மாநகராட்சி வாகனங்கள் ஒரு தார்ப்பாய் போட்டு மூடினால்தான் என்னவாம்!


ADDED : மார் 20, 2024 12:44 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யார் தலையில் விழுமோ?


சரவணம்பட்டி, துடியலுார் ரோடு, ஆதித்யா திருமண மண்டபம் அருகே, நெட்வொர்க் போஸ்ட் ஆபத்தான நிலையில் சாய்ந்தபடிஉள்ளது. வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் மீது விழுவதற்கு முன், கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

- கார்த்திக், சரவணம்பட்டி.

மின்விபத்து அபாயம்


கோவை மாநகராட்சி, 41வது வார்டு, கருப்பராயன் கோவிலில், உயர் கோபுர மின்கம்பத்தின் அடிப்பகுதி, திறந்தநிலையில் உள்ளது. ஒயர்கள் வெளியே நீட்டிக்கொண்டு, ஆபத்தான நிலையில் உள்ளன. குழந்தைகள் தெரியாமல் தொட வாய்ப்புள்ளது.

- தமிழ்ரவி, கருப்பராயன் கோவில்வீதி.

காத்திருக்கும் கழிவுகள்


போத்தனுார், போலீஸ் ஸ்டேஷன் எதிரே, எம்.ஜி.ஆர்., நகர், புதிய வீதி விரிவாக்கத்தில், சாக்கடை கால்வாய் துார்வாரிய பின், கழிவுகள் சாலையிலேயே விடப்பட்டுள்ளன. துர்நாற்றம் வீசுவதுடன், வாகனங்கள் செல்வதற்கும், இடையூறாக உள்ளது.

- சத்யநாராயணன், போத்தனுார்.

அடிப்படை வசதிகளின்றி தவிப்பு


பேரூர், தாளியூர், கலிக்கநாயக்கன்பாளையம், சி.பி.சி., கார்டன், பேஸ் - 3 குடியிருப்பு பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் அமைக்க முறையிட்டும் நடவடிக்கையில்லை. குழாய் அமைத்த பின்னரும், தண்ணீர் விநியோகிக்கவில்லை. குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலை வசதிகளின்றி மக்கள் தவிக்கின்றனர்.

- சங்கர், பேரூர்.

சீரமைக்கப்படாத ரோடு


செல்வபுரம், 79வது வார்டு, முத்துசாமி காலனி, மூன்றாவது வீதியில், சூயஸ் குழாய் பதிப்புக்கு பின், சாலை சரியாக சீரமைக்கவில்லை. தார் ஊற்றாமல் வெறும் கல் மற்றும் மண்ணால் குழிகள் மூடப்பட்டுள்ளன. இப்பகுதியில், வீடுகளின் ரேம்புகளையும் சாலையை ஆக்கிரமித்து அமைத்துள்ளனர்.

- பாலமுருகன், செல்வபுரம்.

சாலையில் பறக்கும் குப்பை


கோவையின் பல பகுதிகளில், குப்பை ஏற்றிச் செல்லும் லாரிகளின் மேல் தார்பாய் போட்டு மூடுவதில்லை. சுங்கம், உக்கடம் சாலையில் இப்படி தார்ப்பாய் போடாமல் சென்ற லாரியிலிருந்து, அதிக குப்பை காற்றில் பறந்தது. வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

- கணேசன், காந்திபுரம்.

கழிவுநீரால் துர்நாற்றம்


செல்வபுரம், தில்லை நகர், சரோஜினி நகர், மூன்றாவது தெருவில், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாரவில்லை. கால்வாயில் சாக்கடை நீர் நிரம்பி நிற்கிறது. பல வாரங்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

- கோவிந்தன், தில்லை நகர்.

துரத்தும் நாய்கள்


ஆவாரம்பாளையம், ராமசாமி லே-அவுட் பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலையில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரைநாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன.

- ராஜா, ஆவாரம்பாளையம்.

அடிக்கடி காய்ச்சல்


மதுக்கரை, 17வது வார்டு, மிலிட்டரி கேம்ப் எதிர்புறம், ஐந்தாவது வீதியில், சாக்கடை வசதியில்லை. இதனால், வீடுகளிலிருந்து திறந்தவெளியில் கழிவுநீர் விடப்படுகிறது. சுகாதாரமின்மையால் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

- சதீஷ், மதுக்கரை.

குப்பை தேக்கம்


சாய்பாபாகாலனி, 62வது வார்டு, சிந்தாமணி நகர், வரிவசூல் மையம் அருகே அதிக குப்பை குவிந்துள்ளது. பல மாதங்களாக கிடக்கும் கழிவுகளால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளைவிரைந்து அகற்றுவதுடன், மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜ், சாய்பாகாலனி.






      Dinamalar
      Follow us