sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புற்றுநோய் கண்டறியும் முகாம் எப்போது ?

/

புற்றுநோய் கண்டறியும் முகாம் எப்போது ?

புற்றுநோய் கண்டறியும் முகாம் எப்போது ?

புற்றுநோய் கண்டறியும் முகாம் எப்போது ?


ADDED : ஜூன் 06, 2025 05:47 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில், 38 மாவட்டங்களிலும் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்கத் திட்டம் அமுல்படுத்தப்படும் என அரசு கடந்த மாதம் அறிவித்தது. கோவை மாவட்டத்தில் மே 9ம் தேதி துவங்கி 45 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகமும் சுகாதார துறையும் தெரிவித்தன.

இத்திட்டத்தில் வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகிய மூன்று புற்று நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிய பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும் அரசு அறிவித்து 25 நாட்கள் ஆகியும் இதுவரை அன்னுார் வட்டாரத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை எதிலும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெறவில்லை. வழக்கம் போல் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது

அரசின் அறிவிப்பை அன்னுார் வட்டாரத்தில் விரைவில் அமுல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us