sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முழு நேர நுாலகம் இல்லாமல் தவிப்பு குமரலிங்கத்துக்கு எப்போது விடிவு?

/

முழு நேர நுாலகம் இல்லாமல் தவிப்பு குமரலிங்கத்துக்கு எப்போது விடிவு?

முழு நேர நுாலகம் இல்லாமல் தவிப்பு குமரலிங்கத்துக்கு எப்போது விடிவு?

முழு நேர நுாலகம் இல்லாமல் தவிப்பு குமரலிங்கத்துக்கு எப்போது விடிவு?


ADDED : பிப் 14, 2024 11:18 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடத்துக்குளம்- குமரலிங்கம் கிளை நுாலகத்தை முழு நேர நுாலகமாக தரம் உயர்த்தி, அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என, அரசுக்கு அப்பகுதி வாசகர்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கத்தில், மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ், கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நுாலகத்தை பயன்படுத்தும் வாசகர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது குறித்து அப்பகுதி வாசகர்கள் சார்பில் தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது: குமரலிங்கம் சுற்றுப்பகுதியில், மக்கள் தொகை மற்றும் படித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த, 1955ல், குமரலிங்கத்தில், கிளை நுாலகம் துவக்கப்பட்டு, 1991ல் இருந்து, நுாலகம் சொந்த கட்டடத்தில், இயங்கி வருகிறது.

தற்போது, இந்நுாலகத்தில், 4 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களும், 70க்கும் மேற்பட்ட புரவலர்களும், 30 ஆயிரத்துக்கும் அதிகமான நுால்களும் உள்ளன.

போதிய இடவசதி இல்லாததால், நுால்களை படிப்பதற்கு பயன்படுத்த முடியாமல், கட்டி வைக்க வேண்டிய நிலை உள்ளது. வாசகர்கள் காற்றோட்டமான சூழ்நிலையில் அமர்ந்து படிப்பதற்கான இடமும் தேவையான தளவாடங்களும் இல்லை.

சுற்றுப்பகுதி கிராமங்களைச்சேர்ந்த மாணவர்கள், அதிகளவு பயன்படுத்தும் நுாலகத்தை, காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை செயல்படும் முழு நேர நுாலகமாக தரம் உயர்த்த வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இப்பகுதியில், முழு நேர நுாலகம் எதுவும் இல்லாததால், பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். மேலும், நுாலகத்தில் பாதுகாப்பான குடிநீர் வசதி, கழிப்பிட வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும்.

நுாலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டி, நாளிதழ் மற்றும் பருவ இதழ்களை வாசகர்கள் படிக்கும் அறையாக மாற்ற வேண்டும். இது குறித்து நீண்ட காலமாக மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us