/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய கடன் பெறுவதில் எப்போது வரும் சிக்கல்? கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை
/
புதிய கடன் பெறுவதில் எப்போது வரும் சிக்கல்? கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை
புதிய கடன் பெறுவதில் எப்போது வரும் சிக்கல்? கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை
புதிய கடன் பெறுவதில் எப்போது வரும் சிக்கல்? கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை
ADDED : ஜூலை 10, 2025 08:52 PM
கோவை; தனி நபர் கடன் பெற்ற பின், சேமிப்பு கணக்கை வேறொரு வங்கிக்கு மாற்றி விட்டால், கடன் வசூலிப்பதில் சிக்கல் ஏற்படும். அவசர தேவைகளுக்கு புதிய கடன் பெற இயலாத சூழல் ஏற்பட்டு விடும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி, அவ்வப்போது நிலவும் பொருளாதார சூழலுக்கு ஏற்பவும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையிலும், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், ரெப்போ வட்டி விகிதங்களை மாற்றியமைக்கிறது.
அவ்வகையில், நடப்பாண்டு ஜூன் மாதம் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்து. இதன் வாயிலாக, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக்கடன் மற்றும் இதர கடன்களுக்கான வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, கோவை வக்கீல் நாகராஜன் கூறியதாவது:புதிதாக கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம், அவர்களின் சிபில் ஸ்கோர் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
வங்கி வட்டி குறைப்பின் பலனை அடைய வேண்டுமெனில், தங்களது சிபில் ஸ்கோர் 850க்கும் குறையாமல் வைத்திருக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர்கள் ஏற்கனவே வங்கியில் பெற்ற வீட்டுக்கடன், வாகன கடன், கல்விக் கடன், கிரெடிட் கார்டு கடன்களின் தவணை தொகைகளை, குறித்த காலத்தில் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தால் சிபில் ஸ்கோர் குறைந்து விடும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், தங்களுடன் பணிபுரியும் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ, அவர்கள் பெற்ற கடனுக்கு 'கியாரண்டர்' ஆக சம்மதித்து, அதற்கான ஆவணங்களை வங்கியில் கொடுத்திருக்கும் சமயத்திலும், முதன்மை கடனாளி கடனை திரும்பி செலுத்தாமல் இருந்தால், இருவருக்குமே சிபில் ஸ்கோர் குறைந்து விடும். எனவே, புதிய கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதோடு, வங்கி வட்டி குறைப்பு சலுகையை பெற இயலாமல் போய் விடுகிறது.
மேலும், சில அரசு ஊழியர்களும், தங்களின் குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமண செலவுகளுக்காகவும், இதர அவசர தேவைகளுக்காகவும், வங்கிகளில் தனி நபர் கடன் பெறுகின்றனர். சம்பள சேமிப்பு கணக்கு, கடன் பெறும் வங்கியில் இருப்பதால், வங்கிகளும் வேண்டு கோளுக்கு இணங்க கடன் வழங்குகின்றன.
தங்களது சேமிப்பு கணக்கில் இருந்து பிரதி மாத இ.எம்.ஐ., தொகைகளை பிடித்தம் செய்து கொள்ள சம்மதித்து கடிதம் கொடுத்து விட்டு, கடன் பெற்ற பின், பணியிட மாறுதல் மற்றும் இதர காரணங்களுக்காக, சேமிப்பு கணக்கை, வேறு வங்கிக்கு மாற்றி விடுகின்றனர்.
இதனால், வங்கியானது கடனை வசூலிக்க இயலாத நிலை ஏற்படுவதோடு, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் அவசர தேவைகளுக்காக புதிய கடன் பெற இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, இதில் கவனம் தேவை.இவ்வாறு, அவர் கூறினார்.

