/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'யார் அந்த சார்'...ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது
/
'யார் அந்த சார்'...ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது
'யார் அந்த சார்'...ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது
'யார் அந்த சார்'...ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது
ADDED : டிச 31, 2024 08:02 AM

பெ.நா.பாளையம் : சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்காரம் நிகழ்வை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மாணவி போலீசில் அளித்த புகாரில், பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர், சார் என்ற மூன்றாம் நபரை குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர் யார் என தெரியவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கரூரில் அ.தி.மு.க.,வினர், 'யார் அந்த சார்' என்ற தலைப்பில் சுவரொட்டி ஒட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று கோவை வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி வழங்க கோரி, கோவை மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர் பஸ் ஸ்டாண்டில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் தலைமையில், அ.தி.மு.க.,வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, வேனில் ஏற்றினர். கைதை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 700 பேரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தால், கோவை--மேட்டுப்பாளையம் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.