sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு

/

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு


ADDED : ஜூலை 16, 2025 02:35 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்,:கோவை அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே வண்ணான் கோவில் பிரிவு உள்ளது. இங்கு பா.ஜ., முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு மாநில செயலர் பரமேஸ்வரன் வசிக்கிறார். அவருடன் மாமனார் ராதாகிருஷ்ணன், 92. மாமியார் சரோஜா, 82. வசித்தனர். நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு வயது முதிர்வு காரணமாக ராதாகிருஷ்ணன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கணவரை தொடர்ந்து பராமரித்து வந்த சரோஜாவுக்கு, இதனால் பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது.

கணவர் ராதாகிருஷ்ணன் மறைவு, மனைவி சரோஜாவை அதிகமாக பாதித்தது. நெடுநேரம் அழுது புலம்பியபடி இருந்தார். பின், சரோஜா திடீரென மயக்கமாகி சரிந்தார். உறவினர்கள் அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் சரோஜா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து நேற்று மாலை, 3:00 மணிக்கு ராதாகிருஷ்ணன் - சரோஜா ஆகியோரது உடல்கள் பெரியநாயக்கன்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us