sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

/

பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்


ADDED : ஜன 24, 2024 09:18 PM

Google News

ADDED : ஜன 24, 2024 09:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு, -கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் விளை நிலத்தை சேதப்படுத்தி, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு - வடசித்துார் ரோட்டில் உள்ள லட்சுமிநகர் பகுதியில், விவசாயி செந்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் புடலை மற்றும் அரை ஏக்கரில் பாகற்காய் பயிரிட்டுள்ளார்.

இரண்டு வகை காய்களும் பறிப்புக்கு தயார் நிலையில் உள்ள நிலையில், காட்டுப்பன்றிகள் அரை ஏக்கர் அளவுக்கு புடலை சாகுபடியை சேதப்படுத்தி உள்ளது.

மேலும், பாகற்காய் பயிரிடப்பட்ட இடத்தில் ஒரு சில இடத்தை பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இதேபோன்று, சுற்றுப்பகுதியிலும் விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயி செந்தில் கூறியதாவது:

ஒன்றரை ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கரில் புடலை மற்றும் அரை ஏக்கரில் பாகற்காய் பயிரிட்டுள்ளோம். தற்போது, பந்தல் காய்கள் பறிப்பு நிலையில் உள்ளன. இந்நிலையில், இரவு நேரத்தில் அதிக அளவு காட்டு பன்றிகள் விளை நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள வாழை தோப்பையும் சேதப்படுத்த துவங்கியுள்ளது. புடலை பயிரிட தற்போது வரை, 40 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. அதிகளவு பயிர் சேதம் அடைந்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பயிரை காக்க வேலி அமைத்து துணிகள் கட்ட ஏற்பாடு செய்துள்ளோம். காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பயிர் சாகுபடி செய்ய அச்சமாக உள்ளது. வனத்துறையினர் இதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us