/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர்களுக்கு வீடு சொந்தமாகுமா? எஸ்டேட் நிர்வாகத்துக்கு கோரிக்கை
/
தொழிலாளர்களுக்கு வீடு சொந்தமாகுமா? எஸ்டேட் நிர்வாகத்துக்கு கோரிக்கை
தொழிலாளர்களுக்கு வீடு சொந்தமாகுமா? எஸ்டேட் நிர்வாகத்துக்கு கோரிக்கை
தொழிலாளர்களுக்கு வீடு சொந்தமாகுமா? எஸ்டேட் நிர்வாகத்துக்கு கோரிக்கை
ADDED : ஜூலை 03, 2025 09:28 PM
வால்பாறை; வால்பாறையில், எஸ்டேட் தொழிலாளர்கள் வசிக்கும் வீடு, அவர்களுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில், 50க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்டில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். குறைவான கூலி, வனவிலங்குகளால் தொழிலாளர்கள் உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால், எஸ்டேட்டை விட்டு வெளியேறி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு தொழிலாளர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், தற்போது,20 ஆயிரத்திற்கும் குறைவான தொழிலாளர்கள், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, 20 ஆண்டுகளில், 70 ஆயிரம் தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு சமவெளி பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், மூன்று தலைமுறையாக தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியில் இன்று வரை சொந்தமாக வீடு கூட இல்லை.
இதனால் எஸ்டேட் பணி காலம் நிறைவடைந்ததும், ஓய்வு காலத்தில் அங்கு வசிக்க சொந்தமாக வீடு இல்லாததால், சமவெளி பகுதிக்கு செல்கின்றனர். இதனாலும், வால்பாறையில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. எஸ்டேட் பகுதியில் வசிக்கும் வீட்டை, அவர்களுக்கே சொந்தமாக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:
வால்பாறையில், வனவிலங்குகள் அச்சுறுத்தலுக்கு இடையே, தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தினக்கூலியாக தற்போது, 446.23 ரூபாய் மட்டுமே வழங்கப்படுக்கிறது.
சமீப காலமாக, எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் தொல்லையாலும், குறைவான கூலி வழங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் எஸ்டேட்டை விட்டு வெளியேறுகிறோம்.
இனியும் தொழிலாளர்கள் வெளியேறாமல் இருக்க வேண்டுமானால், எஸ்டேட் பகுதியில் வசிக்கும் வீடுகள் தொழிலாளர்களுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும். மேலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில், வசிக்கும் வீட்டின் அருகில் காய்கறி தோட்டம் அமைக்க அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் இடம் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.