/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் மாவோயிஸ்ட் மீதான வழக்கில் சாட்சி விசாரணை
/
பெண் மாவோயிஸ்ட் மீதான வழக்கில் சாட்சி விசாரணை
ADDED : ஜூலை 08, 2025 11:48 PM
கோவை; பெண் மாவோயிஸ்ட் மீதான வழக்கில், கோவை கோர்ட்டில் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது.
தமிழக - கேரளா எல்லையில், மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதை அறிந்து, அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். 2019, நவ., 9ல் , ஆனைகட்டி, அட்டப்பாடி பகுதியில் கேரள அதிரடிபடைக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த மூன்று பேர், சுட்டு கொல்லப்பட்டனர்.
இதில், காயமடைந்த மாவோயிஸ்ட்கள் தீபக், ஸ்ரீமதி என்ற ேஷாபா ஆகியோர் தப்பினர். ஆனைகட்டி பகுதியில் பதுங்கியிருந்த ேஷாபா, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு, மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று சாட்சி விசாரணைக்கு வந்த போது, ேஷாபா ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து, வழக்கு வரும் 24க்கு ஒத்திவைக்கப்பட்டது.