ADDED : ஜூன் 25, 2025 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; நெகமம் பகுதியில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நெகமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி, 48. மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், 40 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது உறுதியானது. கஞ்சாவை பறிமுதல் செய்து, மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.