/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணவர் இறந்த சோகத்தில் நான்கு வயது குழந்தையுடன் பெண் தற்கொலை
/
கணவர் இறந்த சோகத்தில் நான்கு வயது குழந்தையுடன் பெண் தற்கொலை
கணவர் இறந்த சோகத்தில் நான்கு வயது குழந்தையுடன் பெண் தற்கொலை
கணவர் இறந்த சோகத்தில் நான்கு வயது குழந்தையுடன் பெண் தற்கொலை
ADDED : நவ 22, 2024 07:10 PM
நெகமம்:நெகமம், மரம்பிடுங்கிகவுண்டனூரில் 4 வயது குழந்தையுடன் இளம் பெண் கல்லுக்குழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெகமம் அருகே உள்ள மரம்பிடுங்கிகவுண்டனூரை சேர்ந்தவர் மணிமேகலை, 20. இவரது கணவர் அஜித்குமார் கடந்த 2021ம் ஆண்டு இறந்தார். மணிமேகலையின் பெற்றோர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்தனர். இதனால் மணிமேகலை தனது மாமா சுரேஷ் வீட்டில் தங்கி வந்தார். இவருக்கு 4 வயதில் யாதவ் என்ற மகன் உள்ளார். இதை நினைத்து மன வேதனையில் இருந்து வந்தார். மேலும், தனது குழந்தையை எப்படி வளர்ப்பது என எண்ணியும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இவற்றை நினைத்து மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, இவர் தனது மகன் யாதவை வயிற்றில் துண்டை வைத்து கட்டிக்கொண்டு மரம்பிடுங்கிகவுண்டனூரில் உள்ள கல்லுக்குழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவ்வழியில் சென்றவர்கள் இதை கவனித்து நெகமம் போலீஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு துறையினர் தண்ணீரில் மிதந்த நிலையில் இருந்த இருவரையும் மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.