நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பிலோரிஜோஸ், 59. இவர், நேற்றுமுன்தினம் காலை வீட்டிலிருந்து கிளம்பி, சின்னாம்பாளையம் பகுதியில், உடுமலை - பொள்ளாச்சி ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது, அவ்வழியே வந்த வேன் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

