sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தரம் குறைந்த நகை விற்றதால் பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு

/

தரம் குறைந்த நகை விற்றதால் பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு

தரம் குறைந்த நகை விற்றதால் பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு

தரம் குறைந்த நகை விற்றதால் பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு


ADDED : நவ 04, 2024 10:50 PM

Google News

ADDED : நவ 04, 2024 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தரம் குறைந்த நகை விற்றதால், பெண்ணுக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

பேரூர், செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வி என்பவர், பெரிய கடை வீதி எம்.எஸ்.சுந்தரி ஜுவல்லரியில் நகை சீட்டுக்கு மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தார்.

மொத்தம் செலுத்திய, 19 ஆயிரத்து, 800 ரூபாய்க்கு, அதே கடையில் நான்கு கிராம் மோதிரம் வாங்கினார். 916 தரம் கொண்டது என நகைக்கடையினர் தெரிவித்தனர்.

அவசர செலவுக்கு, அடகு கடையில், அந்த மோதிரத்தை அடகு வைக்கச் சென்றபோது, மோதிரம் 916 தரம் கொண்டது இல்லை என்று தெரிவித்தனர். பரிசோதித்தபோது, போலியான 916 தர முத்திரை குத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. மோதிரம் வாங்கிய அதே கடைக்குச் சென்று, 916 தர மோதிரத்தை மாற்றித்தருமாறு கேட்டபோது, மறுத்தனர். இழப்பீடு வழங்கக்கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மோதிரத்தின் தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்றபடி, 916 தரம் கொண்ட நகையை மனுதாரருக்கு வழங்குவதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 7,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us