/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்பிரே அடித்து செயின் பறித்த பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை
/
ஸ்பிரே அடித்து செயின் பறித்த பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை
ஸ்பிரே அடித்து செயின் பறித்த பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை
ஸ்பிரே அடித்து செயின் பறித்த பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை
ADDED : பிப் 20, 2026 06:29 AM

கோவை:மதுரை மாவட்டம், மேலுாரை சேர்ந்தவர் தெய்வநதி,36. இவர், 2022 பிப். 11 ல், கோவை ரத்னபுரியில் பரிசு பொருள் கடைக்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்த செல்வராணி என்பவரிடம், அலங்கார டீ கப் வேண்டும் என கேட்டார். செல்வராணி குனிந்து அதை எடுத்தார். நிமிர்ந்த போது, தெய்வராணி அவர் முகத்தில் பூச்சி கொல்லி ஸ்பிரே மருந்தை அடித்து, கழுத்தில் அணிந்திருந்த ஏழே முக்கால் சவரன் செயினை பறித்து தப்ப முயன்றார். செல்வராணி கூச்சலிட்டதால், பக்கத்து கடைகளில் இருந்தவர்கள் ஓடிவந்து தெய்வநதியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ரத்னபுரி போலீசார் விசாரித்தனர். கோவை 4வது கூடுதல் கோர்ட்டில் விசாரணை நடந்தது. தெய்வநதிக்கு 7 ஆண்டு சிறை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விக்னேஷ் மது நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.

