sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நொய்யலில் பெண் சடலம் மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

/

நொய்யலில் பெண் சடலம் மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

நொய்யலில் பெண் சடலம் மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

நொய்யலில் பெண் சடலம் மீட்பு; போலீசார் தீவிர விசாரணை


ADDED : ஜூலை 15, 2025 08:54 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 08:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; செல்லப்பகவுண்டன்புதூரில், நொய்யல் ஆற்றில் மிதந்த பெண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த, சில நாட்களுக்கு முன் ஆற்றில் நீர்வரத்து சீரானது. தொடர்ந்து, ஆறு மற்றும் வாய்க்கால்களில் நீர் சென்று கொண்டுள்ளது.

இந்நிலையில், செல்லப்பகவுண்டன்புதூர், மேற்குபுறவழிச்சாலை பணிகள் நடந்து வரும் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில், நேற்றுமுன்தினம் ஒரு பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதியினர், பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீரில், மூன்று நாட்களாக இருந்ததால், உடல் அழுகிய நிலையில் இருந்தது.

உயிரிழந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்தவர், புத்தூர், புதுக்காலனியை சேர்ந்த செல்வி,45 என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இவர், கொலை செய்யப்பட்டாரா, ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து, பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us