sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நாட்டை வல்லரசாக்கும் பிரதமரின் கனவை நிறைவேற்றுவதில் பெண்கள் பங்கு முக்கியம்: மத்திய அமைச்சர் அன்னபூர்ணாதேவி பேச்சு

/

நாட்டை வல்லரசாக்கும் பிரதமரின் கனவை நிறைவேற்றுவதில் பெண்கள் பங்கு முக்கியம்: மத்திய அமைச்சர் அன்னபூர்ணாதேவி பேச்சு

நாட்டை வல்லரசாக்கும் பிரதமரின் கனவை நிறைவேற்றுவதில் பெண்கள் பங்கு முக்கியம்: மத்திய அமைச்சர் அன்னபூர்ணாதேவி பேச்சு

நாட்டை வல்லரசாக்கும் பிரதமரின் கனவை நிறைவேற்றுவதில் பெண்கள் பங்கு முக்கியம்: மத்திய அமைச்சர் அன்னபூர்ணாதேவி பேச்சு


ADDED : ஜன 06, 2025 02:41 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ''வரும் 2047க்குள், இந்தியாவை வல்லரசாக்கும் பிரதமரின் கனவை நிறைவேற்ற பெண்கள் பங்கு முக்கியம்,'' என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பேசினார்.

கோவை, அவினாசிலிங்கம் பல்கலையின், 36வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.

விழாவில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்னபூர்ணாதேவி பேசியதாவது:

வரும், 2047 க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற, பிரதமரின் கனவை நனவாக்க, அனைத்துத் துறைகளிலும் பெண்களின் தீவிரப் பங்களிப்பு அவசியமானது; முக்கியமானது.

ஊட்டச்சத்துக் குறைபாடு, கல்வியறிவின்மை, பாலின சமத்துவமின்மை பொருளாதார மேம்பாடு மற்றும் உலகளாவிய காலநிலை சவால்களைக் கையாள்வதில், பெண்களின் தலைமை ஆரோக்கியமான, பாதுகாப்பான, சமமான சமூகத்திற்கு வழி வகுக்கும். தேசிய கல்விக் கொள்கை, 2020 இம்மதிப்புகளுடன் எதிரொலிக்கிறது.

அதன் கொள்கைகள், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான சூழலை வளர்ப்பதிலும், முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வியே பெண்களின் உள் வலிமையை பலப்படுத்துகிறது.

இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில், இளநிலையில், 1,814, முதுநிலையில், 615, முதுநிலை பட்டயம், 9, எம்.பில்., ஒருவர், பி.எச்டி., 33 என, மொத்தம், 2,472 மாணவியர் பட்டம் பெற்றனர். 83 மாணவியர் பதக்கங்கள் பெற்றனர்.

பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் வரவேற்றார். வேந்தர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். பதிவாளர் இந்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us