sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மகளிர் சுய உதவி குழுவினரின்  -2025  மதி  கண்காட்சி துவக்கம்

/

 மகளிர் சுய உதவி குழுவினரின்  -2025  மதி  கண்காட்சி துவக்கம்

 மகளிர் சுய உதவி குழுவினரின்  -2025  மதி  கண்காட்சி துவக்கம்

 மகளிர் சுய உதவி குழுவினரின்  -2025  மதி  கண்காட்சி துவக்கம்


ADDED : டிச 25, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மகளிர் சுய உதவி குழுவினரின் தயாரிப்பு பொருட்களை அறிமுகம் செய்யும் 'சாரஸ் -2025 மதி' கண்காட்சியை, கோவை எம்.பி.,ராஜ்குமார், கலெக்டர் பவன்குமார் ஆகியோர் கொடிசியா ' டி' அரங்கில் துவக்கி வைத்தனர்.

ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீஹார், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் சார்பாக 10 அரங்குகளும், தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை சேர்ந்த மகளிர் குழுவினரின், 113 அரங்குகளும், பிற துறைகள் சார்பில் 10 அரங்குகள் என்று மொத்தம், 172 அரங்குகள் அமைந்துள்ளன. கண்காட்சி வரும் ஜன.,1 வரை நடைபெறும்.

மரப்பொம்மை, மூலிகை சோப், மசாலா பொருள், மரசெக்கு எண்ணெய், சாம்பிராணி, சணல்பை, சேலைகள், அலங்காரப் பொருட்கள், தேன், உணவு பொருள், வீட்டு உபயோகப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சியில், ஐந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும், சமுதாய திறன் பயிற்சி நிறைவு சான்றிதழ்களையும், 10 பயனாளிகளுக்கும் களப்பயிற்சி முடித்த கல்லூரி மாணவியருக்கு, பயிற்சி சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் மதுரா, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், வங்கி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us