ADDED : ஜூன் 05, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால், பொது நீர்நிலைகள், விவசாய நிலத்திலுள்ள கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மழை பொழிவு இல்லாத நிலையில், மானாவாரி நிலத்திலும், தென்னந்தோப்புகளிலும், விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது. மானாவாரி நிலத்தை உழுது ஆடிப்பட்டத்துக்கு தயார்படுத்தி வருகின்றனர். தென்னந்தோப்புகளில், உரமிடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.