sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஏழு நிலை ராஜகோபுர பணிகள் விறுவிறு

/

ஏழு நிலை ராஜகோபுர பணிகள் விறுவிறு

ஏழு நிலை ராஜகோபுர பணிகள் விறுவிறு

ஏழு நிலை ராஜகோபுர பணிகள் விறுவிறு


ADDED : ஏப் 04, 2025 11:35 PM

Google News

ADDED : ஏப் 04, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; வனபத்திரகாளியம்மன் கோவிலில், ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள், துரிதமாக நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இது ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டதாகும். கோவிலுக்கு வார நாட்களில், நூற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

கோவிலில் சுற்று பிரகார மண்டபம், மதில் சுவர், நடைபாதை மண்டபம், முடிகாணிக்கை மண்டபம் என, 14 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து கோவில் செயல் அலுவலரும், உதவி கமிஷனருமான கைலாசமூர்த்தி கூறியதாவது: கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கல்காரப்பணி முடிந்து, ராஜகோபுரத்தில் இரண்டு நிலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது நிலைக்கு கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோபுரத்தின் 7 நிலைகளும் டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராஜகோபுரம் திருப்பணிகள், 3 உபயதாரர்கள் வாயிலாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.






      Dinamalar
      Follow us