ADDED : மே 05, 2025 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்;சூலுார் அருகே மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி பலியானார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வினோத்குமார், 36. கடந்த ஒரு மாதமாக சூலுாரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். காடாம்பாடியில் வேலை செய்து கொண்டிருந்த போது, வைப்ரைட்டர் மெஷினை இயக்கியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
சூலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சூலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.