sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கொலை வழக்கில்தொழிலாளிக்கு ஆயுள்சிறை

/

கொலை வழக்கில்தொழிலாளிக்கு ஆயுள்சிறை

கொலை வழக்கில்தொழிலாளிக்கு ஆயுள்சிறை

கொலை வழக்கில்தொழிலாளிக்கு ஆயுள்சிறை


ADDED : அக் 23, 2025 11:56 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்சிறை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

கோவை அருகேயுள்ள இடிகரை செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம்.48. இவரும், எருக்கம்பெனி,பிரபு நகரை சேர்ந்த பிரகாஷ்,40, என்பவரும் சேர்ந்து கூலி வேலைக்கு சென்றதால் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2022, ஜன., 18ல், பிரகாசை ஓரினசேர்க்கைக்கு சண்முகம் அழைத்துள்ளார். இதற்கு பிரகாஷ் மறுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், சண்முகத்தை கல்லால் தாக்கி பிரகாஷ் கொலை செய்தார்.

சாய்பாபாகாலனி போலீசார் விசாரித்து பிரகாசை கைது செய்தனர். அவர் மீது, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷிற்கு ஆயுள்சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us