ADDED : டிச 17, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் தாஜூருல் ஹக், 18. கட்டட தொழிலாளி. ஊத்துப்பாளையம் பிரிவில் தங்கி வேலை செய்து வந்த அவர், சம்பவத்தன்று இரவு, தென்னம் பாளையம் சென்று பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பினார்.
அங்குள்ள பேக்கரி அருகே அவிநாசி ரோட்டை கடக்கும் போது, கோவை நோக்கி சென்ற கார் மோதி, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.