ADDED : நவ 11, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : கோவை துடியலூர் பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 53. தனியார் வெல்டிங் ஒர்க் ஷாப்பில், தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று முன் தினம் இரவு மேட்டுப்பாளையம் தனியார் தீம் பார்க் அருகே, ஊட்டி பிரதான சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.