/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுப்பு வீடு கட்டிக்கொடுங்க தொழிலாளர்கள் வேண்டுகோள்
/
தொகுப்பு வீடு கட்டிக்கொடுங்க தொழிலாளர்கள் வேண்டுகோள்
தொகுப்பு வீடு கட்டிக்கொடுங்க தொழிலாளர்கள் வேண்டுகோள்
தொகுப்பு வீடு கட்டிக்கொடுங்க தொழிலாளர்கள் வேண்டுகோள்
ADDED : ஜன 12, 2024 11:16 PM
வால்பாறை;வால்பாறையை சுற்றிலும் தேயிலை எஸ்டேட்கள் அதிக அளவில்உள்ளன.பெரும்பாலான எஸ்டேட்களில், அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, தேயிலை, மிளகு, காபி பயிரிட்டுள்ளனர்.
நிலங்களை மீண்டும் 'ரீ சர்வே' செய்து, அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பை மீட்டு, அந்த இடத்தில் தொழிலாளர்களுக்குஅரசின் சார்பில், தொகுப்பு வீடுகள் கட்டிதர வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து, தொழிலாளர்கள்கூறியதாவது:
எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் அச்சுறுத்தலால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடமுடியாமலும், நிரந்தரமாக வசிக்க முடியாமலும் தவிக்கிறோம்.
எனவே, வால்பாறை நகரை சுற்றிலும் தனியார் எஸ்டேட்நிர்வாகங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை மீட்டு, அந்த இடத்தில் தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்.
குடியிருக்க சொந்த வீடு கூட இல்லாத நிலையில், கூலி வேலை செய்து பிழைக்கும் தொழிலாளர்களின் நலன் கருதி, தொகுப்பு வீடுகள் கட்டித்தரவேண்டும்.
இவ்வாறு, கூறினர்.