/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளி இறப்பு; போலீஸ் விசாரணை
/
தொழிலாளி இறப்பு; போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 16, 2025 09:17 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, தொழிலாளி இறந்தது குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு பாலத்தின் கீழே, கடந்த, 13ம் தேதி அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். சடலத்தை மீட்ட கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பாலத்தின் கீழே இறந்து கிடந்தது, ஆனைமலை பெத்தநாயக்கனுாரை சேர்ந்த விவசாய தொழிலாளி சுப்ரமணி என்கிற பூபதி,30, என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
பூபதியின் அம்மா செல்வி,50, கடந்த, 9ம் தேதி தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் குருணை மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், கவலைக்கிடமாக இருந்த அம்மா இறந்து விடுவாரோ என, பூபதி மனவேதனையில் இருந்துள்ளார். கடந்த, 13ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று அம்மாவை பார்த்து விட்டு, மனைவி சவுந்தர்யாவுடன் பஸ்சில் திரும்பினார்.
சமத்துார் அருகே சென்ற போது, பஸ்சில் அவரை காணாததால் மனைவி தேடியுள்ளார். இந்நிலையில், பாலத்தின் கீழ் அவரது சடலம் மீட்கப்பட்டது. அவர், பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம், என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, கடந்த, 15ம் தேதி சிகிச்சையில் இருந்த அவரது அம்மா இறந்தார்.
இவ்வாறு, கூறினர்.