sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விடுமுறை நாளில் பணி; இரட்டிப்பு சம்பளம் கேட்பு

/

விடுமுறை நாளில் பணி; இரட்டிப்பு சம்பளம் கேட்பு

விடுமுறை நாளில் பணி; இரட்டிப்பு சம்பளம் கேட்பு

விடுமுறை நாளில் பணி; இரட்டிப்பு சம்பளம் கேட்பு


ADDED : நவ 11, 2025 10:21 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: விடுமுறை நாளில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது தினக்கூலியாக, 475 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலான எஸ்டேட்களில் காலை, மாலை நேரங்களில் இன்சென்டீவ் முறையில் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

சீசன் காலங்களில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:

வால்பாறையில் பல்வேறு காரணங்களால், தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறிய நிலையில், மிக குறைவான தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தினக்கூலியாக, 600 ரூபாய் வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது, 475ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

விலைவாசிக்கு ஏற்ப சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். விடுமுறை நாட்களில் வேலை செய்தால், அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us