/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜெய மாருதி கோவிலில் ஆராதனை விழா
/
ஜெய மாருதி கோவிலில் ஆராதனை விழா
ADDED : ஆக 12, 2025 09:04 PM

மேட்டுப்பாளையம்; காரமடை ஜெய மாருதி ராகவேந்திரர் கோவிலில், 354ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது.
காரமடையில், கோவை சாலையில் ஸ்ரீ ஜெய மாருதி, ஸ்ரீ குரு ராகவேந்திரா கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் 354ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது.
அதிகாலை கோவில் நடை திறந்து, மங்கல இசையுடன் கூடிய சுப்ரபாதம் பாடப்பட்டது. பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உட்பட வாசனை திரவியங்களால், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன் பின் அலங்கார பூஜையும், குரு ஸ்தோத்திர பாராயணம், மலர் அர்ச்சனை, மங்கள ஆரத்தி ஆகியவை நடந்தன. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தாச பலஞ்சிக மகாஜன திருப்பாவை வழிபாட்டு குழுவினர், பஜனை பாடினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.